‘ஒருசார் பகற்குறியின் வகை’ என்ற தலைப்பின் கீழ் மேலும்
மூன்று பகற்குறி வகைப்பாடுகளை அகப்பொருள் விளக்க நூலாசிரியர் அமைத்துள்ளார். அவை:
இரங்கல் : தலைவன் பிரிவிற்குத் தலைவி வருந்துதல்; தோழியும் புலம்புதல்.
வன்புறை : தோழி, தலைவியை இடித்துரைத்தல் (அறிவுரை கூறுதல்)
இற்செறிப்பு உணர்த்தல் : தலைவி வெளியே
வரமுடியாதபடி வீட்டுக் காவல் ஏற்பட்டதைத் தோழி
தலைவனிடம் கூறுதல்.
ஒருசார் பகற்குறியின் விரிவு
இரங்கல் - வன்புறை - இற்செறிப்பு உணர்த்தல் என
மூன்று வகைப்பட்ட ‘ஒரு சார் பகற்குறி’ யானது ‘கிழவோன்
பிரிந்துழிக் கிழத்தி மாலையம் பொழுது கண்டு
இரங்கல்’ முதலாக, ‘கிழவோன் தஞ்சம் பெறாது
நெஞ்சொடு கிளத்தல்’ ஈறாக, 14 செய்திப் பிரிவுகள்
உடையது. அப்பிரிவுகளுக்கான விளக்கத்தை இனிக் காண்போம்.
-
பகற்குறியில் அதற்குரிய
இடத்துக்கு வந்து தலைவன் தலைவியைப்
புணர்ந்து, பிரிந்து சென்ற பிறகு தலைவி
மாலைப் பொழுதைக் கண்டு வருந்திப் பேசுதல்.
-
தோழி புலம்பிப்
பேசுதல்.
-
பகற்குறிக்குத்
தலைவன் வருவது தாமதம் ஆகும் போதும்,
தலைவி மனம் வருந்திப் பேசுதல் - ‘நீ
வருந்துவது முறையன்று’ என்று தோழி தலைவியிடம்
இடித்துரைத்தல்.
-
தலைவி தோழி மீது
வெறுப்புற்று அவளை நேருக்கு நேர் நோக்காமல்
புறமொழியாகப் பேசுதல் - அது கேட்ட தோழி
தலைவியை மகிழ்வுடன் உபசரித்து அவளுடைய
வெறுப்பை நீக்க, அதன் பின் மீண்டும்
தலைவி பேசுதல்.
-
தலைவியை அச்சுறுத்தி,
தோழி பேசுதல்.
-
தலைவனை விட்டுப்
பிரியமுடியாத தன்மையை எண்ணித் தலைவி
தனக்குள் பேசுதல்.
-
தலைவன் வருவதைத்
தோழி அறிவித்தல்.
-
தலைவன் குறியிடத்தில்
வேலி ஓரமாக வந்து நிற்க அவன் உணரும்படி
தலைவிக்கு உள்ள வீட்டுக் காவலைத் தோழி
அறிவித்தல்.
-
தலைவன் வந்து நிற்க
அதை அறியாதவள் போலத் தோழி தலைவியிடம்
பேசுதல். (முன்னிலைப் புறமொழி)
-
தலைவன் வந்து நிற்க
அவனுக்கு முன் தமது வீட்டுக் காவலை
(இற்செறிப்பைத்) தோழி நேரடியாகச் சொல்லுதல்.
-
அதனைத் தொடர்ந்து
தோழி தலைவனிடம் ‘எம்மை மறவாமை வேண்டும்’
என்று ஓம்படையாகப் பேசுதல். (ஓம்படை
= பாதுகாப்பு; மறவாமை)
-
தலைவன் தன் நெஞ்சோடு
தானே பேசுதல்.
இவை யாவும் ஒருசார் பகற்குறியின் விரிவுச் செய்திகள் ஆகும்.
|