இரவுக்குறி ஒன்பது வகைப்படும். அவையாவன :
தலைவனும்
தலைவியும் இரவில் குறிப்பிட்ட ஓர் இடத்தில் சந்தித்துக் கூடி மகிழ்வது
இரவுக்குறி என்றும், அது ஒன்பது வகைகளை உடையது என்றும் அறிந்தோம்.
அதுவே 27 விரிவுபட்ட செயல்களாகவும் விளக்கப்படுகிறது. அவற்றுள் முதன்மையான
செய்திப் பிரிவுகளை இனிக் காண்போம்.
-
தலைவன் இரவுக்குறியை விரும்புதல்.
-
தலைவன் வரும்வழி இரவில் வர ஏற்றதன்று எனத்
தோழி கூறுதல் - தலைவனோ தான் வரும் வழி எளிதானது என வலியுறுத்தல்.
-
தலைவனும் தோழியும் அவரவர் நாட்டு அணிகலன்
பற்றியும் அதன் சிறப்பையும் பேசுதல்.
-
தோழியின் கருத்தை முதலில் உடன்படாத தலைவி
தன் நெஞ்சோடு பேசுதல் ; பிறகு உடன்பட்டுத் தோழியிடம் பேசுதல்.
-
தலைவி இரவுக்குறி உடன்பட்டதை, தோழி தலைவனிடம்
கூறுதல்.
-
தாய் உறங்கிவிட்டாளா என்பதைத் தோழி கண்டறிதல்.
-
தலைவன் வந்திருப்பதைத் தோழி தலைவியிடம் கூறுதல்.
-
தலைவியைக் குறியிடத்துக்குத் தோழி அழைத்துச்
செல்லுதல். அங்கு விட்டுவிட்டுத் திரும்புதல்.
-
தலைவன் தலைவிக்கு முன் தோன்றுதல்.
-
வரும் வழியின் இடர்ப்பாடு கூறித் தலைவி வருந்துதல்
; அவளைத் தலைவன் தேற்றுதல்.
-
புணர்தல் ; அதன்பின் புகழ்தல்.
-
‘இரவுக்குறியில் இனி வராதே’ என, தலைவி தலைவனைத்
தடுத்தல்.
-
தலைவன் தலைவியை அவளது வீட்டிற்குச் செல்லவிடுத்தல்.
-
தோழி தலைவியை மீளவும் இல்லத்திற்கு அழைத்துச்
செல்லுதல்.
-
தோழி தலைவனை இரவுக்குறி விலக்குதல் (தடுத்தல்)
- தோழியின் சொல் கேட்டுத் தலைவன் மயங்குதல் - தோழி தலைவனிடம்
தலைவியின் மனத்துயர் கூறுதல்.
-
தலைவன் சென்று தன் இருப்பிடம் சேருதல்.