|
|
வரைதல் வேட்கையின் ஒருவகையான அச்சத்திற்குரிய
செய்திப்பிரிவுகளாவன:
- தலைவியிடம், ‘உனக்கு ஏற்பட்ட துன்பம் யாது?’ எனத்
தோழி கேட்ட போது, ‘அருமை வாய்ந்த களவு
ஒழுக்கம் செவிலிக்குத் தெரிந்துவிட்டது’ என்று
தலைவி கூறுதல்.
- தலைவன் வரும் வழியில் உள்ள இடர்ப்பாடுகளைப்
பற்றித் தோழியிடம் தலைவி கூறுதல்.
- ஊரார் பழிதூற்றும் செயல் (அலர்) காரணமாக எழுந்த
அச்சத்தால் தலைவி தோழியிடம் பேசுதல்.
- தலைவன் வரும்வழி பற்றிய அச்சத்தைத் தலைவி தோழியிடம் உரைத்தல்.
- தலைவன் வரும் வழியை விலக்குமாறு தோழியிடம் தலைவி கூறுதல்.
- தலைவன் தன்னைக் காணவரும் இரவுக்குறியைத்
தடுத்து நிறுத்துமாறு (விலக்குமாறு) தலைவி
தோழியிடம் கூறுதல்.
- தாய் வேலனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்துகிறாள்
என்பதைச் சுட்டிக் காட்டித் தலைவன் வருவதைத்
தடுத்து நிறுத்துமாறு தோழியிடம் தலைவி கூறுதல்.
- மாற்றார் மணம் பேச வருவதனைத் தடுத்து
நிறுத்துமாறு தோழியிடம் தலைவி கூறுதல்.
|