|
|
களவு தொடர வழியின்றிக் காதல் உறவு நிலைக்க
வழிதேடும் தலைவியும் தோழியும் வரைவு எனப்படும்
திருமணத்தின் மீது விருப்பம் கொள்வர்.
அவ்விருப்பத்தைத் தலைவனிடமும் புலப்படுத்தி
வலியுறுத்துவர். நேரடியாகவோ, குறிப்பாகவோ மணம்
செய்து கொள்ளுமாறு கேட்பர். இதுவே வரைவு கடாதல்
எனப்படும். இதன் நான்கு வகைகளாவன :
- பொய்த்தல்
- மறுத்தல்
- கழறல்
- மெய்த்தல்
|