3.6 தொகுப்புரை |
இப்பாடத்தின் மூலம் கீழ்க்காணும் இலக்கணச் செய்திகளை அறிந்து கொண்டோம். |
(1) தலைவனும் தலைவியும் பல அறநெறிகளைக் கற்றுக்கொண்டு வாழ்வது கற்பு. |
(2) கற்பு எனப்படும் இல்வாழ்க்கை தலைவன், தலைவி, தோழி செவிலி என்னும் நால்வரது மகிழ்ச்சியின் ஒருங்கிணைப்பாக அமைகிறது. |
(3) கற்பு வாழ்க்கையில் சூழ்நிலை காரணமாகப் பல்வேறு பிரிவுகளைத் தலைவன் மேற்கொள்வான். |
(4) தலைவன் மேற்கொள்ளும் பிரிவுகளில் பெரிதுபடுத்திப் பேசப்படுவது பரத்தையிற் பிரிவு என்பதாகும். |
(5) பரத்தையிற் பிரிந்த தலைவன் வாயில்கள் எனப்படும் பாணன், விறலி, தோழி முதலானவர்கள் மூலம் மீண்டும் தலைவியைச் சேரும் முயற்சியை மேற்கொள்வான். |
(6) கற்பு வாழ்க்கை மேற்கொள்ளும் தலைவன், ஓதல், காவல், தூது, துணை, பொருள் என்னும் ஐவகைப்பட்ட காரணங்களுக்காகவும், பிரிந்து செல்லுதல் உண்டு. |
1. |
பிரிவின் எஞ்சிய வகைகளை எழுதுக. |
விடை |
2. |
பரத்தையிற் பிரிவு ஒழிந்த எஞ்சிய பிரிவுகளுக்கான கிளவித் தொகைகள் எத்தனை? யாவை? |
விடை |
3. |
வன்புறை - வன்பொறை விளக்கம் தருக. |
விடை |
4. |
செவ்வணி, வெள்ளணி - விளக்குக. |
விடை |