4.4 தொகுப்புரை |
இப்பாடத்தின் மூலம் கீழ்க்காணும் செய்திகளைக்
கற்றுணர்ந்தோம். |
அகப்பாடல்கள் ஒவ்வொன்றும் பல உறுப்புகளை உள்ளடக்கியதாக
அமைகின்றன என்பதைக் கண்டுணர்ந்தோம். |
களவு, கற்பில் எவரெவர் கூற்று நிகழ்த்துவதற்கு
உரியவர் என்னும்
வரையறையை அறிந்தோம். அவ்வாறே, கூற்றினைக் கேட்போர்,
கூற்று நிகழும் இடம் - காலம் - கூற்றின்
பயன் முதலான
உறுப்புளைப் பற்றிய விளக்கங்களைக் கண்டுணர்ந்தோம்.
|
ஓர் அகப்பாடல், செய்திகளைக் கருத்து வெளிப்பாடாகப் புலப்படுத்துவது இயல்பானது.
அதற்கு மேலாக - அதைவிட முன்னதாக - உடல்வழிப் புலப்பாடாக - நகை, அழுகை முதலான
உணர்ச்சிகளைப் புலப்படுத்துதல் உண்டு. அது மெய்ப்பாடு எனப்படும் என்னும்
கருத்தினை உணர்ந்தோம். |
அகப்பாடல் செய்யுட்களில் சொற்கள்
உள்ளது உள்ளபடியே
வைத்துப் பொருள் காண்பது இயல்பானது. அதற்கு மாறாகச்
சில
பாடல்களில் சொற்களை முன்பின்னாகக் கொண்டு
கூட்டிப்
பொருள்கொள்ளும் முறையும், தேவையும்
உண்டு. அதுவே
பொருள்கோள் எனப்படும்
என்னும் விளக்கத்தை
அறிந்துகொண்டோம்.
|
அகப்பாடல் தலைமக்கள் கூற்று நிகழ்த்தாத
சில இடங்களில்,
தேவை கருதிச் சிறப்புக் கருத்தாகப் பாடல்
இயற்றும் கவிஞனே
பேசும் இடங்களைத் துறை என்னும்
இறுதி அகப்பாட்டு
உறுப்பாக வரையறுத்துள்ளனர்.
|