5.1 உவமைப் பொருள் | |||
அகப்பாட்டினுள் வரும் இருவகைப் பொருள்களில் முதலாவதாக அமைவது உவமைப் பொருளாகும். இது உள்ளுறை உவமம், வெளிப்படை உவமம் என இரண்டு வகைப்படும். | |||
உள்ளுறை என்னும் சொல்லை, உள்+உறை எனப் பிரித்துப் பொருள் காணலாம். ஒரு பாடலில், உட்கருத்தாக ஒன்று மறைந்து நிற்பது உள்ளுறை எனப்படும். அவ்வாறு மறைந்து நிற்கும் கருத்துக்கு கருப்பொருள் நிகழ்ச்சி அடிப்படையாக (உவமைபோல) அமையும்போது அதனை உள்ளுறை உவமம் என்று கூறுவர். | |||
உள்ளுறை உவமம் பெரும்பான்மையும் அகப்பொருட் செய்யுட்களில் இடம்பெறும். கருப்பொருளை மையப்படுத்தி வெளிப்படையாகச் சொல்லப்பட்ட செய்தியை உவமையாகக் கொண்டு அதன் மூலம் உணரத்தக்க வேறோர் செய்தியை அறிவதே உள்ளுறை உவமம் ஆகும். | |||
உள்ளுறை உவமம் பற்றிய இலக்கணத்தை நாற்கவிராச நம்பி | |||
உள்ளுறை உவமம் உய்த்துணர் வகைத்தாய்ப் | |||
என்று ஒரு நூற்பாவின் மூலம் வரையறுத்துள்ளார். | |||
உதாரணம்: | |||
வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக் | |||
இப்பாடலில் கருப்பொருளை வைத்துச் சொல்லப்பட்ட உவமையின் மூலம் குறிப்பால் கொள்ளப்படும் பொருள் யாது என்பதைக் கீழ்க்காணும் ஒப்பீடு இனிது விளக்கும். |
சொல்லப்பட்ட உவமை |
குறிப்பால் கொள்ளும் பொருள் |
||
வண்டு |
தலைவன் |
||
செவ்வியுடையதோர் தாமரை | அழகிய தலைவி | ||
வண்டு தாமரையில் நிறை மதுச்சேர்ந்து உண்டாடுதல் | தலைவன் தலைவியிடம் இன்பம் நுகர்தல் |
||
தாமரையை வண்டு நீங்குதல் | தலைவியைத் தலைவன் நீங்குதல் | ||
காவி (குவளை மலர்) | பரத்தை | ||
இனவண்டுகள் காவியின் தேன் உண்ணல் | பரத்தர் (ஆடவர் பலர்) அப்பரத்தையை நுகர்தல் | ||
குவளை மலர் வண்டுகளால் நுகரப்பட்டுத் தேன்குறைதல் | பரத்தரால் (ஆடவர் பலரால்) துய்க்கப் பெற்றுப் பரத்தை பொலிவிழத்தல் | ||
தேன்குறைந்த குவளை மலரை வண்டு விரும்பிச் சேர்தல் | பொலிவிழந்த பரத்தையைத் தலைவன் விரும்பிச் சேர்தல் |
இது உவமையின் பிறிதோர் வகையாகும். உள்ளுறை போலப் பொருள் மறைந்து நிற்றல் இல்லாமல் வெளிப்படையாக விளங்குவது இவ்வகை. இதனை நான்கு பிரிவுகளில் காணலாம். |
வ. எண். |
பிரிவுகள் |
விளக்கம் |
உதாரணம் |
1. |
வினை உவமம் |
செயல் பற்றியது |
புலி போலப் பாய்ந்தான் |
2. |
பயன் உவமம் |
பயன் பற்றியது |
மாரி (மழை) போன்றவன் பாரி |
3. |
மெய் உவமம் |
வடிவம் பற்றியது |
வேல் போன்ற விழி |
4. |
உரு உவமம் |
நிறம் பற்றியது |
பவளம் போன்ற வாய் |