5.3 கைக்கிளையும் பெருந்திணையும் |
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகைத் திணைகளையும் அன்பின் ஐந்திணை என்பர். |
அவற்றிற்கு மாறாக அமையும் எஞ்சிய திணைகள் இரண்டு. அவையாவன: |
1) கைக்கிளை |
2) பெருந்திணை |
இவற்றையே, |
1) அகப்பொருட் கைக்கிளை |
2) அகப்புறக் கைக்கிளை |
3) அகப்பொருட் பெருந்திணை |
4) அகப்புறப் பெருந்திணை |
என்று மேலும் விரிவு படுத்திக் கூறுவர். |
இவற்றுள் அகப்பொருட் கைக்கிளை என்பது ஏற்கெனவே முன்னைய பாடங்களில் (D02111, D02113) அகத்திணை இயலில், விளக்கப்பட்டது. எனவே, எஞ்சிய மூன்றும் இவ்வியலில் விளக்கப்படுகின்றன. |