5.7 அகப்பாட்டினுள் பாடப்படுவோர் | ||
அகப்பாடல்களில் பாடப்படும் தலைவன் இரு நிலைப் பட்டவனாக அமைகிறான். இதனை அகப்பொருள் விளக்க நூலாசிரியர் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார். | ||
பாட்டுடைத் தலைவன் கிளவித்தலைவன் எனப் | ||
அவருள், உயர்ந்தோன் பாட்டுடைத் தலைவன் ஆகும் (246) | ||
இந்நூற்பாக்களின்படி, அகப்பாட்டினுள் பாடப்படுவோர் பாட்டுடைத் தலைவன் - கிளவித்தலைவன் என இருநிலைப்பட்டவராக அமைகின்றனர்; இவ்விருவருள் உயர்ந்தோன் பாட்டுடைத் தலைவன் ஆவான். | ||
அகப்பாட்டினுள் பாடப்படும் பாட்டுடைத்தலைவன், கிளவித் தலைவன் என்னும் இருவருக்கும் கூறப்படும் பெயர்கள் பல உள்ளன. அவற்றை நிலப்பெயர், வினைப்பெயர், பண்புப்பெயர், குலப்பெயர், இயற்பெயர் என்னும் ஐந்து பிரிவாக வகுத்துள்ளனர். | ||
இவற்றுள் இயற்பெயர் என்பது கிளவித் தலைவனுக்குக் கூறப்படுவதில்லை. ஏனைய நிலப்பெயர் முதலான நான்கு பெயர்கள் கூறப்படும். பாட்டுடைத் தலைவனுக்கு இயற்பெயர் உட்பட ஐந்து வகைப் பெயர்களும் கூறப்படும். | ||
ஐவகைப் பெயர்களுக்கும் சான்றுகளைக் காண்போம்.
| ||
1) நிலப்பெயர் | : |
மலைநாடன், ஊரன் |
2) வினைப்பெயர் | : |
மலையைப் பிளந்தான், வேட்டுவன் |
3) பண்புப்பெயர் | : |
நெடுஞ்சேரலாதன், பெருவழுதி, அண்ணல் |
4) குலப்பெயர் | : |
சேரன், சோழன், பாண்டியன், குறவன், ஆயன் |
5) இயற்பெயர் |
: |
அவரவர் பெற்றோர், ஆசிரியர் வைத்த குறியீட்டுப் பெயர். |