5.8 முப்பொருட்களின் வழுவும் அமைதியும் |
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன முப்பொருள்களாகும். இவை தத்தமக்கு உரிய திணைகளோடு பொருந்தி வருதல் இயல்பானது. அவ்வாறின்றிப் பிற திணையோடு மாறி - கலந்து - மயங்கி வருதல் உண்டு. அவற்றைத் திணை மயக்கம் என்னும் தலைப்பில் குறிப்பிடுவர். அவ்வாறு வருவது குற்றமாயினும் ஏற்றுக்கொள்ளலாம் என்று வழங்கும் சமாதானம் வழு அமைதி எனப்படும். |
இவ்வாறு முதல், கரு, உரி என்னும் மூவகைப் பொருளும் மயங்கி வருவதைச் சங்க இலக்கியத்தில் பற்பல பாடல்களில் காணமுடிகிறது. |
உதாரணம் |
புலிகொல் பெண்பால் பூவரிக் குருளை |
(ஐங்குறுநூறு, 265) |
விளக்கம் |
இப்பாடலில் இடம்பெற்ற முப்பொருள்களாவன: |
முதற்பொருள் | குன்று (மலை) | இது குறிஞ்சித் திணை |
கருப்பொருள் | புலி, பன்றி | இவையும் குறிஞ்சித் திணைக்கு உரியவை |
உரிப்பொருள் | புதல்வனையும், என்னையும் விட்டுவிட்டுத் தலைவன் பரத்தையிடம் சென்று விட்டான் என்று கூறித் தலைவி பிணக்குக் கொள்வது (ஊடல்) | இது மருதத் திணைக்கு உரியது. |
குறிப்பு: இப்பாடலில் குறிஞ்சித் திணையில் மருதத்திற்கு உரிய உரிப்பொருளாகிய ஊடல் மயங்கி வந்துள்ளதை மேற்காணும் விளக்கம் நன்கு புலப்படுத்தும். |