நொச்சித்
திணை எயில் (மதில்) காத்தலையும், உழிஞைத் திணை அதனை முற்றுகை
இடுதலையும் குறிப்பிடுகின்றன. இவற்றைப் பற்றி இந்தப் பாடம் பேசுகிறது.
உழிஞை மருதத்தின் புறன் ஆகும். எனவே உழிஞையின்
மறுதலையாகிய (எதிரதாகிய) நொச்சியும் மருதத்தின் புறனே
என்பதை விளக்குகின்றது
முறையே நொச்சி-உழிஞை ஆகியவற்றின்
இலக்கணங்களைப் புறப்பொருள் வெண்பா மாலையின்
அடிப்படையில் மொழிகின்றது. மேலும் நொச்சித் திணையின்
எட்டுத் துறைகளையும் உழிஞைத் திணையின் இருபத்தொன்பது
துறைகளையும் பற்றிப் பேசுகின்றது.
உழிஞை மறவர் மதில் புறத்திலிருந்தும், நொச்சி மறவர்
அவர்களை எதிர்த்தும் போரிடுவதைச் சொல்கின்றது.
|