அசைக்கு
உறுப்புகளாவது, எழுத்துகள் என்று கூறுகின்றது.
தமிழினம் எழுத்தோசைக்கு, மாத்திரை என்னும்
அளவைப்
படைத்தது என்று சொல்கின்றது. அசைக்குரிய உறுப்புகளாம்
எழுத்துகளைப் பற்றி விரித்துரைக்கின்றது.
இந்தப் பாடத்தைப்
படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
எழுத்து - என்றதன் பெயர்க்காரணத்தை
அறியலாம்.
எழுத்தின் வரைவிலக்கணத்தைத்
தெரிந்து கொள்ளலாம்,
ஆய்தம், உயிராக
வரும் இடத்தையும் மெய் ஆகும் இடத்தையும் தெளியலாம்.
எழுத்திலக்கணத்தார்
கொள்ளும் குற்றியலிகரம், யாப்பிலக்கணத்தார் கொள்ளும்
குற்றியலிகரம் பற்றிய செய்திகளுடன் குற்றியலுகரம்
பற்றியனவற்றையும் அறியலாம்.