|
‘அடி’ என்பது செய்யுள் உறுப்புகள் வரிசையில் ஐந்தாம்
உறுப்பு; தொடை, ஆறாம் உறுப்பு என்று சொல்கின்றது, அடி,
தொடை எனும் இரண்டும் முதனிலைத் தொழிற்பெயர்கள்;
இரண்டும் செய்யுளின் புறவய உறுப்புகள் என்கின்றது. ‘அளவு’
ஒன்றனை மனத்தில் இறுத்திக் கொண்டுதான் பெரியது, சிறியது
என நாம் சொல்கிறோம் என்கிறது. செய்யுள் ஒன்று, சீரடியாலும்
அடியாலும் நடக்கும் ஆதலின், அவற்றால்
உருவாகும்
தொடைகளும் பலவாகும் என்று சுட்டுகின்றது.
|