பாவகை
நான்கனுள் வெண்பா, ஆசிரியப்பா என்னும்
முதல் இருவகைப் பாக்களின்
இலக்கணங்களைப்
பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன்
விளக்குகிறது.
வகைகளுக்கிடையே உள்ள சிறுசிறு
வேறுபாடுகளைத்
தெளிவுபடுத்துகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
வெண்பா,
ஆசிரியப்பா ஆகிய இருவகைப் பாக்களின் அடியும்
ஓசையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஐவகை
வெண்பாக்கள், நால்வகை ஆசிரியப்பாக்கள் ஆகியவற்றின்
இலக்கணங்களைப் புரிந்து கொள்ளலாம்.
இலக்கியங்களில்
இப்பாவகைகளைக் கண்டு தெளியும் அறிவைப்
பெறலாம்.
படைப்பூக்கம்
உள்ளோர் இவ்விலக்கண உதவிகொண்டு தாமே வெண்பாக்களையும்
ஆசிரியப்பாக்களையும் படைக்கலாம்.