5.4 வைதருப்பம் - வலி செய்யுளில் தொகைச் சொல் மிகுதியாக வருமாறு தொடுப்பது வலி எனப்படும். வலி - வன்மையுடையது.
தொகைச்சொல் என்பது அறுவகைத் தொகைச் சொற்களையும் குறிக்கும். வேற்றுமைத் தொகை, வினைத்தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை ஆகியவை அவை என்று முன்பு படித்தது நினைவிருக்கலாம். இவ்வாறான தொகைச் சொற்கள் பல அமையுமாறு வருவது வலி என்னும் குணப்பாங்காகிறது. இனி, வலி என்பதற்கான செய்யுள் சான்று பின் வருமாறு :
(தானம் = கொடை வரையாது வழங்கும் மேகம் போன்ற பெரிய கையும், வீரக்கழல் அணிந்த காலும், பெருமைமிக்க வேலும் உடைய கிள்ளியாகிய சோழ மன்னனின் நீண்ட துதிக்கையும் தொங்கும் வாயும் உடைய யானை சினந்தால் அதைக் கட்டியிருக்கும் கால் சங்கிலியின் பூட்டு வாய் மட்டுமோ அறுபடும்? பகைவர்தம் மனைவியரின் கழுத்திலிருக்கும் தாலியும் அல்லவோ அறுபடும். அதாவது, பகையரசர்கள் இறந்து படுவது உறுதி என்பது பாடலின் பொருளாகும். இவை வேற்றுமைத் தொகை.
இது உம்மைத் தொகை. இவ்வாறு தொகைச் சொற்கள் மிக வருதல் வலி ஆகும்.
(அவி = ஆகுதிப்பொருள் நெய் முதலிய ஆகுதிப் பொருள்களை இட்டு ஆயிரக்கணக்கான வேள்விகளைச் செய்வதைவிட ஓர் உயிரைக் கொல்லாமையும் உண்ணாமையுமா செயல் நல்லனவாகும்,
இவ்வாறு, பல செய்யுள்களிலும் பதவுரை காண முற்படும் போது உருபு விரித்தலின் அருமையையும் அழகையும் நாம் அறியலாம். வலி என்னும் குணப்பாங்கில் ஓரளவு தொகைச் சொற்கள் இடம் பெறுதலை வைதருப்பநெறி சுட்டுகின்றது. மிக அதிகமாகத் தொகைச் சொற்கள் இடம் பெற வேண்டும் எனக் கௌட நெறி குறிப்பிடுகின்றது. |