செய்யுள்நெறியின் இருபெரும்
வகைகளாக உள்ள
வைதருப்பம், கௌடம் ஆகிய இரண்டும் தம்முள் ஒற்றுமையும்
வேற்றுமையும் ஒருங்கு கொண்டு விளங்குகின்றன.
ஒற்றுமைக் கூறுகளாக
உள்ள குணங்கள் ஒழுகிசை,
பொருளின்பம், உதாரம், சமாதி ஆகியனவாகும்.
வ.எண் |
வைதருப்பம்
|
கௌடம்
|
1) |
செறிவு முதலான பத்துக்
குணங்களை உடையது. |
பத்துக் குணங்களுள் சில
ஏற்கும். |
2) |
வல்லினம், மெல்லினம்,
இடையினம் ஆகிய
மூவினத்தாலும் அமைந்த
பாடலுடையது. |
ஓரின எழுத்துகளால்
ஆன பாடல் உடையது. |
3) |
பொருள் எளிதில்
விளங்க வேண்டும். |
பொருள் எளிமையுடன்
நயமும் வேண்டும். |
4) |
மோனைகள், தொகைகள்
ஓரளவே போதுமானது. |
மோனைகள், தொகைகள்
மிகுதியும் தேவை. |
5) |
உலகியல் நெறிக்கேற்பப்
புகழுரை அமைதல்
வேண்டும். |
உலகியலுக்கு
அப்பாற்பட்டும் கற்பனை
வளம் பெருகிடும்
புகழுரை அமையலாம். |
6) |
உய்த்தல்இல் பொருண்மை
காணுதல். |
உய்த்தல் பொருண்மை
காணுதல். |
இவ்வாறு இருவகைச்
செய்யுள் நெறிகளும் தமக்குள்
தொடர்பு கொண்டுள்ளன.