6.1 கௌடநெறி

    செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தல்இல் பொருண்மை, காந்தம், வலி, சமாதி ஆகிய பத்துக் குணப்பாங்குகளும் குறித்த கௌட நாட்டினரின் நெறி, ‘கௌடநெறி’ எனப்படும்.

    வைதருப்ப நெறியினர் கூறும் பத்துக் குணப்பாங்குகளில் சிலவற்றொடு வேறுபட்டு அமைவது கௌடநெறியின் இயல்பாகும்.

கௌடம் என்பது கருதிய பத்தொடும்
கூடாது இயலும் கொள்கைத்து என்ப
(தண்டியலங்காரம் : 15)

(கூடாது = பொருந்தாமல் இயலும் = அமையும்)

என்பது தண்டியலங்காரம்.