1.2 உவமை அணி | ||||||||||||||||||||||||||||||
தொல்காப்பியர் உவமைஅணி குறித்துக் கூறியுள்ளார் என்பதையும் உவமை அணியே பொருளணிகளில் தலைமை சான்றது என்பதையும் முன்னர்க் கண்டோம். காலப்போக்கில்உவமை அணியிலிருந்து உருவகம், வேற்றுமை, ஒட்டணிமுதலிய பல அணிகள் தோன்றின. இதனால் உவமை அணியைத்'தாய் அணி' என்று கூறுவர். | ||||||||||||||||||||||||||||||
1.2.1 உவமை அணியின் இலக்கணம் | ||||||||||||||||||||||||||||||
1)
2) 3) |
ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும்
இடையே உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது உவமை அணி ஆகும். பலபொருள்களுக்கு
இடையே உள்ள ஒப்புமையும் காட்டப்படலாம். பொருள்களுக்கு இடையே உள்ள பண்பு ஒப்புமை,தொழில் ஒப்புமை, பயன்ஒப்புமை ஆகியவை காரணமாகஉவமை அமையும். ஆகவே அடிப்படையில் பண்பு உவமை, தொழில்உவமை,பயன் உவமை என உவமை மூன்று வகைப்படும். |
|||||||||||||||||||||||||||||
உவமை அணியின் இலக்கணத்தைக் கீழ்க்காணும்
நூற்பா விளக்குகிறது.
| ||||||||||||||||||||||||||||||
1.2.2 உவமை அணி விளக்கம் | ||||||||||||||||||||||||||||||
உவமை அணியின் இலக்கணத்தைச் சற்று விரிவாகக்காண்போம். உவமை அணியில் நான்கு உறுப்புகள் இருப்பதைக்காணலாம். அவை, | ||||||||||||||||||||||||||||||
1) உவமை அல்லது உவமானம் 2) பொருள் அல்லது உவமேயம் 3) ஒத்த பண்பு 4) உவமை உருபு |
||||||||||||||||||||||||||||||
ஆகியன. | ||||||||||||||||||||||||||||||
![]() |
||||||||||||||||||||||||||||||
புலவர் விளக்கிக் கூறக் கருதும் பொருள், 'பொருள்'அல்லது
'உவமேயம்' எனப்படும். அப்பொருளை விளக்கவோ அழகுபடுத்தவோ அவர் இயைத்துக்
கூறும் மற்றொரு பொருள்'உவமை' அல்லது 'உவமானம்' எனப்படும்.
இங்குப் புலவர் விளக்கக் கருதிய பொருள் முகம்.ஆகவே 'முகம்' உவமேயம். முகத்தை விளக்குவதற்காகஅதனோடு அவர் இயைத்துக் கூறும் பொருள் 'தாமரை'ஆகவே தாமரை உவமானம்.
உவமேயத்துக்கும் உவமானத்துக்கும் பொதுவாக
உள்ள இயல்பைப் புலவர் சுட்டிக் காட்டியிருப்பார். இதுவே 'ஒத்த பண்பு'
எனப்படும்.
வாய்க்கும் பவளத்துக்கும் ஒத்த தன்மையாகிய 'செம்மை' (செம்மை-வாய்) இங்குச் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதைப்பாருங்கள்.
உவமானத்தையும் உவமேயத்தையும் இணைக்கும் போல, புரைய, ஒப்ப, மான போன்ற இவை உவமை உருபுகள் எனப்படும்.
|
||||||||||||||||||||||||||||||
ஒரு பொருளொடு ஒரு பொருளும்
ஒரு பொருளொடு பல பொருளும் பல பொருளொடு பல பொருளும் பல பொருளொடு ஒரு பொருளும் |
||||||||||||||||||||||||||||||
என நான்கு வகையாகப் பொருள்கள் இயைத்து (ஒப்புமைப்படுத்தி)க் கூறப்படும்.
எடுத்துக்காட்டு:
இங்கு 'வானம்' என்ற ஒரு பொருள் 'மேனி' என்றஒரு பொருளுக்கு உவமை ஆயிற்று.
எடுத்துக்காட்டு:
இங்குப் 'பிறைச்சந்திரன்' என்ற ஒரு பொருள் 'பற்கள்'(எயிறு) என்ற பல பொருளுக்கு உவமை ஆயிற்று.
எடுத்துக்காட்டு:
இங்குச் 'சுறா மீன் கூட்டம்' என்ற பல பொருள்தொகுதி, 'வாள் ஏந்திய வீரர் குழாம்' என்ற பல பொருள்தொகுதிக்கு உவமை ஆயிற்று.
எடுத்துக்காட்டு:
|
||||||||||||||||||||||||||||||
(பீடு-பெருமை;
ஓடுவை-ஓடுவாய்) |
||||||||||||||||||||||||||||||
இங்கு, கரிகாலனை எதிர்த்து நிற்க மாட்டாமல் தோற்றுஓடிய பகை மன்னர்கள் பலர் தலைவன் வந்தவுடன்தலைவிக்கு முன் செயலற்று ஓடப் போகின்ற வாடையாகியஒரு பொருளுக்கு உவமை ஆயினர். | ||||||||||||||||||||||||||||||
1.2.3 மூவகை ஒப்புமைகள் | ||||||||||||||||||||||||||||||
'பண்பு, தொழில், பயன்' என்னும் மூன்றுஒப்புமைத்தன்மை காரணமாக உவமை அணி தோன்றும் எனமுன்பு கண்டோம். இங்கு இவற்றை விளக்கமாகக் காணலாம்.
ஒரு பொருளின் வடிவம், நிறம், சுவை, அளவுஆகியவை
அப்பொருளின் 'பண்பு' எனப்படும். இப்பண்புகள்காரணமாக அமையும் உவமை பண்புஉவமை
ஆகும்.
இங்குக் காட்டிய சான்றுகளில் முறையே பவளத்தின்நிறம் மேனிக்கும், மூங்கிலின் வடிவம் தோளுக்கும், பாலின்சுவை சொல்லுக்கும், உவமைகளாயின. இவ்வாறு பண்புஒப்புமை காரணமாக உவமை அமைந்தமையால் இவை பண்புஉவமை ஆகும்.
ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாகஅமையும் உவமை தொழில் உவமை எனப்படும்.
|
||||||||||||||||||||||||||||||
(அரிமா-சிங்கம்:
அணங்கு-துன்பம்: துப்பு-வலிமை) |
||||||||||||||||||||||||||||||
சிங்கத்தைப் போன்று பகைவருக்குத் துன்பம் தரும்வலிமையினை உடைய திருமாவளவன் என்பது இவ்வடிகளின்பொருள். துன்பம் தருதல் என்ற தொழில் ஒப்புமை காரணமாகஇது தொழில் உவமை ஆயிற்று. | ||||||||||||||||||||||||||||||
ஒரு பொருளால் கிடைக்கும் பயன் காரணமாக அமையும்உவமை பயன் உவமை எனப்படும்.
|
||||||||||||||||||||||||||||||
(வண்கை-கொடைத்தன்மை,
காணிய-காண,சென்மே-செல்லுக) |
||||||||||||||||||||||||||||||
மழையை ஒத்த கொடைத் தன்மையை உடையஆய் வள்ளலைக் காண்பதற்குச் செல்வாயாக என்பது இவ்வடிகளின் பொருள். மாரியால் விளையும் பயனும் வள்ளலின்கொடையால் விளையும் பயனும் ஒத்தலின் இது பயன் உவமைஆயிற்று. | ||||||||||||||||||||||||||||||
1.2.4 உவமை அணியின் வகைகள் | ||||||||||||||||||||||||||||||
உவமை அணி மொத்தம் இருபத்து நான்கு வகைகளைஉடையது. (தண்டி. நூ. 31). அவை வருமாறு; | ||||||||||||||||||||||||||||||
1) விரி உவமை 2) தொகை உவமை 3) இதரவிதர உவமை 4) சமுச்சய உவமை 5) உண்மை உவமை 6) மறுபொருள் உவமை 7) புகழ் உவமை 8) நிந்தை உவமை 9) நியம உவமை 10) அநியம உவமை 11) ஐய உவமை 12) தெரிதரு தேற்ற உவமை |
13) இன்சொல் உவமை 14) விபரீத உவமை 15) இயம்புதல் வேட்கை உவமை 16) பலபொருள் உவமை 17) விகார உவமை 18) மோக உவமை 19) அபூத உவமை 20) பலவயிற்போலி உவமை 21) ஒருவயிற்போலி உவமை 22) கூடா உவமை 23) பொதுநீங்கு உவமை 24) மாலை உவமை. |
|||||||||||||||||||||||||||||
இவற்றுள் குறிப்பிடத்தக்க சிலவற்றைச் சான்றுடன் விளக்கமாகக்காண்போம். | ||||||||||||||||||||||||||||||
உவமானத்திற்கும் உவமேயத்திற்கும் இடையிலான
பண்பு,தொழில், பயன் பற்றிய ஒப்புமைத் தன்மை வெளிப்படையாகஅமைவது விரி
உவமை.
(துவர்-பவளம்; சேல்-சேல்மீன்; புயல்-மழை) இப்பாடலின் பொருள்:
ஒப்புமைத் தன்மை தொக்கி (மறைந்து) வருவதுதொகை
உவமை.
(தரளம்-முத்து; முறுவல்-நகை,பல்; காமரு-அழகிய; வேய்-மூங்கில்) இப்பாடலின் பொருள் :
ஒரே பாடலில் உவமேயத்தை உவமானமாகவும்,உவமானத்தை
உவமேயமாகவும் தொடர்ச்சியாகக் கூறுவது இதர விதர
உவமை. அதாவது, முதலில் உவமானமும்உவமேயமுமாகச் சொல்லப்பட்ட பொருள்களையே
பின்னர்உவமேயமும் உவமானமுமாக மாற்றிச் சொல்லுதல், இவ்வாறுசொல்வதன் நோக்கம்,
இப்பொருள்களுக்கு ஒப்புமையாகக்கூடிய மூன்றாவது பொருள் எதுவும் இல்லை
எனக் குறிப்பதுஆகும்.
(செவ்வி - அழகு)
உலகில் இல்லாத பொருளை உவமையாகக் கூறுவதுஅபூத
உவமை. (பூதம் - பொருள்(தனிமம்); அ - இல்லாத;அ
பூதம் - இல்லாத பொருள்) இதனை 'இல் பொருள்உவமை' என்று கூறுவர்.
இதுவே பெருவழக்கு. கம்பராமாயணம், பெரிய புராணம், சீவகசிந்தாமணி போன்றகாப்பியங்களில்
மிகுதியாக இவ்வணி பயில்வதைக் காணலாம்.கம்ப ராமாயணத்தில் ஒரு சான்று காண்போம்.
(தழீஇஅன்ன-தழுவியது போன்ற) இராவணன் கும்பகருணனை எழுப்பி வரச் சொல்கிறான்.
எழுந்து வந்த கும்பகருணன். இராவணனை வணங்கினான். நின்றுகொண்டிருந்த இராவணன்
கும்பகருணனை மார்பாரத் தழுவிக்கொள்கிறான். இது, நின்ற குன்று ஒன்று நீண்ட
நெடியகால்கெளாடு நடந்து சென்ற ஒரு குன்றைத் தழுவியது போல்இருந்தது என்று
கம்பர் கூறுகிறார். |
||||||||||||||||||||||||||||||
1.2.5 எடுத்துக்காட்டு உவமை | ||||||||||||||||||||||||||||||
தண்டியலங்கார
ஆசிரியர் உவமையணி வகைகளில் ஒன்றாக எடுத்துக்காட்டு உவமை அணியைக் குறிப்பிடாமல்
விட்டார். ஆனால் திருக்குறள் முதலிய பல தமிழ் இலக்கியங்களில் இது மிகுதியாகப்
பயில்கிறது. உவமானமும் உவமேயமும் தனித்தனி வாக்கியங்களாக அமைந்து அவற்றிற்கு இடையே போல என்ற சுட்டிக்கூறும் உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டுஉவமையணி எனப்படும். எடுத்துக்காட்டு:
பாடல் பொருள் :
|
||||||||||||||||||||||||||||||