பாடம் - 3

D05123 சொல்லுருபின் வளர்ச்சி வரலாறு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழ்மொழியில் வேற்றுமை உருபு எவ்வாறு வேற்றுமைப் பொருள் உணர்த்தி வருகிறதோ அதேபோல் சொல்லுருபு தனி ஒரு சொல்லாக நின்று வேற்றுமைப்பொருள் உணர்த்துவதை விளக்குகிறது. சொல்லுருபு எந்தெந்தக்     காலகட்டங்களில் எவ்வாறான வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை எல்லாம் தெளிவாக விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இப்பாடத்தின் மூலம் தமிழ்மொழியின் இலக்கணம் எவ்வாறு பாகுபடுத்தப்படுகின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

  • சொல்லுருபு வளர்ந்த நிலையினைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.

  • சங்க காலத்தில் சொல்லுருபுகள் பயன்பாட்டில் இருந்தனவா என்பதைப் பற்றிப் படித்துணரலாம்.

  • இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் காணப்படும் சொல்லுருபுகளை அறிந்து கொள்ளலாம்.

  • இடைக்காலத்தில் எழுந்த இலக்கண நூல்கள் சொல்லுருபு பற்றி எவ்வாறான கருத்துகளைக் கூறுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.

  • தற்காலத்தில் சொல்லுருபின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மற்றும் எவ்வாறான வேற்றுமை உருபுகளுக்குப் பதிலாகச் சொல்லுருபு வருகிறது என்பது பற்றியும் அறிய முடிகிறது.

பாட அமைப்பு