1)

பண்டைக்காலக் கோட்டைகளில் பயன்பட்ட இயந்திரப் பொறிகளும் எவையேனும் ஐந்தனைக் கூறி விளக்குக.
(1) வளை விற்பொறி
-
வளைந்து தானே எய்யும் இயந்திரம்
(2) கருவிரலூகம்
-
கரிய விரல்களுடைய குரங்கைப் போல் இருந்து அருகே வரும் எதிரிகளைப் பிடித்துக் கொல்லும் பொறி.
(3) கல்லுமிழ் கவண்
-
தானே கற்களைப் பகைவர் மீது எறியும் கவண்
(4) பாகடுகுழிசி
-
செம்பையோ வெல்லப் பாகையோ உருக்கி வைத்துக் கொண்டு எதிரிகள் மீது சிதறும் பாத்திரம்.
(5) தொடக்கு
-
கழுக்கோல் போல எதிரியின் கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கிலி.


முன்