மனிதன் தன் வாழ்க்கையில் படிப்படியே
முன்னேறிக் கொண்டு செல்கின்ற இயல்பினன். கட்டடக் கலையிலும் முன்னேறுவதற்கு
அவனைத் தாண்டிய உந்து சக்திகளைக் கூறுகிறது.
ஆலயக் கட்டடங்கள்
தொடர்பான சிந்தனை முகிழ்ப்பினை
எடுத்துக்காட்டி, ஆலயங்களின் வகைகளைக் கூறுகிறது.
பல்லவர் காலத்தில்
அமைந்த கற்கோயில்கள் பற்றிய
விளக்கங்கள் கூறப்படுகின்றன.
தேர்க்கோயில்களும்
கட்டுமானக் கற்கோயில்களுமாக
வளர்ந்த படிநிலை வளர்ச்சி கூறப்படுகிறது.
பொதுவாக ஆலய வளர்ச்சியில்
பல்லவர்கள் தாம் கட்டிய
கோயில்கள் வாயிலாகப் புரிந்த பணிகள் கூறப்படுகின்றன.
பல்லவர் காலத்தில்
கட்டப்பட்ட திருவதிகை வீரட்டானம்,
திருச்சி மலைக்கோட்டைக் கோயில், ஆலயக் கட்டுக் கோப்பு
ஆகியவை பற்றிக் கூறப்படுகின்றது.
பல்லவர் காலத்திற்குப்
பின் சோழர்கள் ஆட்சிக்கு வந்து
கட்டிய அரண்மனைகள் பற்றிய சில செய்திகள் கூறப்படுகின்றன.
|