1) ஆலய மண்டபங்களில் விதானச் சிறப்பினைப் பற்றிக் கூறுக.

பல்லவர் காலத்திற்குப் பிறகு, ஆலய மண்டபங்களின் உட்பக்கக்     கூரையான     விதானத்தில்     சிற்ப வேலைப்பாடுகளைச் சோழர்கள் புகுத்தி வந்துள்ளனர் ; கீழைச் சாளுக்கியர்களுடன் கொண்ட தொடர்பினால் இத்தகைய சிற்பக் கலைத்தாக்கம் உண்டாயிற்று என்பர்.

விதானத்தில தாமரை மலர்கள், மலர் கொத்தும் கிளிகள், எட்டுத்     திக்குப் பாலகர்கள், இராசிமண்டலங்கள், பததேவதைகள், பதமண்டலங்கள், கற்சங்கிலிகள், பாம்பு வளையங்கள் முதலிய சிற்பப் படைப்புகள் காலந்தோறும் வளர்நிலை கொண்டன.



முன்