2.7 தொகுப்புரை சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரம் பாடினர். இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இம் மூவரும் இனிய பண்களில் பாடிய தேவாரப் பாடல்கள் மக்களுக்கு நல்வழி காட்டின. இனிய இசையோடு பாடும் தேவாரங்கள் நோய் தீர்க்க வல்லவை. என்றும் இம்மை மறுமைப் பலன் தருபவை என்றும் நம்பப்படுகின்றன. கால ஓட்டத்தில் பல தேவாரங்கள் மறைந்தன. இருந்தும் பெரும்பாலான பாடல்களை மீட்டெடுத்தான் சோழ மாமன்னன் முதலாம் இராஜராஜன். தேவாரங்களைப் பண்ணோடு பாடத் தஞ்சைப் பெரிய கோயிலில் ஏற்பாடுகள் செய்தான். தலைமுறை தலைமுறையாக இவர்கள் வழி வந்தவர்கள் ஓதுவார் ஆவர். ஓதுவார்கள் 23 பண்களில் தேவாரம் பாடுவர். தற்போது தேவாரப் பண்ணிசைக் கச்சேரிகள் பொது அரங்குகளில் நடைபெறுகின்றன.
|