5.5 நாட்டுப்புறப் பாடல்களில் மெட்டு
என்று வரும். இது வரும் பாடலின் கருத்தைப் பற்றிக்கூட கவலைப்படாமல் தாயின் உணர்வு மெட்டாக அமைந்து குழந்தையை உறங்க வைக்கும்.
நாட்டுப்புற மக்களின் வழிபடும் தெய்வமான மாரியம்மன் மீது பாடப்படும் பாடல்கள் பல உள. மாரியம்மன் ஆலய வழிபாட்டின் பொழுது இவை ஆட்டப் பாடல்களாக அமையும். கொட்டு முதலான இசைக் கருவிகளின் மூலம் முழங்கும் நடைக்கேற்ப இப்பாடல்களை இசைப்பர்.
இது போலத் தேரோட்டத்தின் பொழுது சந்த நயமிக்க பாடலைப் பாடி ஆடுவர்.
என்ற மெட்டை இசைத்துப் பாட்டுப்
பாடுவர்.
இது இன்பக் களியாட்டமிக்க ஆட்டப்பாடலாக அமையும். ஒலிக்குத் தக்கவாறு மெட்டு அமையும்.
ஏற்றப்பாட்டிற்கு எதிர்பாட்டில்லை என்பர். தண்ணீரை ஏற்றம் மூலம் இறைக்கும் பொழுது அலுப்புத்தட்டாத நிலையில் இசை இனிமையோடும் பாடுவர். ஏற்றம் இறைக்கும் பொழுது இருவர் மாறி மாறி விளித்துக் கொண்டு பாடுவர்.
நாட்டுப்புற மக்களின் பாடல்களில் மிகவும் சிறப்புடையது தெம்மாங்குப் பாடல்களாகும். இவற்றை மக்கள் இசையுடன் பாடி ஆடிமகிழ்வர். தென்பாங்கு என்பது தெம்மாங்கு ஆயிற்று.
தேனினும் இனிய தெம்மாங்குப் பாடல்கள் தேன் பாங்காகத் திகழும். இதனாலும் தேன்பாங்கு தெம்மாங்கு ஆயிற்று என்றும் கூறுவர். உரையாடல் அமைப்பில் அமைந்தும் விளங்கும்.
பிறந்த மனிதன் இறப்பது இயற்கை. இறந்தவனை எண்ணி அவன் செய்த சேவைகளை எண்ணிப் பாடுவது மரபு. இதற்கு மெட்டுகளே உயிரோட்டமாக அமையும், ஒவ்வொரு வரியும் பாடி முடிக்கும் பொழுது மெட்டை ஒலித்துக் கொண்டே வருவர். இதனைப் பின்பாட்டுப் பாடுவது என்றும் கூறுவர்.
|