‘வில்’ போன்ற இசைக்கருவியின் வடிவத்தால் பெயர்
கொண்டது
வில்லுப்பாட்டு என்னும் கதைப் பாடல் வடிவமாகும்.
என்னும் நாட்டுப்புறப்பாடல், வில்லுப்பாட்டுக் (bow song) கும்
கோவிலுக்கும் உள்ள தொடர்பை
வெளிப்படுத்தும். நாடகத்தன்மையுடன் கதை கூறிச் செல்லும் முறைமைக்குக் கதைக் கூற்றரங்கு (Narrative Theatre) என்று பெயர். வில்லுப்பாட்டு முழுக்க இவ்வடிவத்துக்கான கூறுகளைக் கொண்டு விளங்குகிறது. கதைக் கூற்றரங்கில் ஒரு கதையின் பல்வேறு பாத்திரப்படைப்புக்களின் இயல்புகளையும் மிகச் சிறந்த முகபாவனைகளுடன் குறிப்பிட்ட குழுவினர் நடித்துக் காட்டும் பாங்கு, பார்வையாளரை மிகவும் ஈர்க்கும் வண்ணம் அமைந்து நிற்கும். (முகபாவனை = முகத்தில் அந்தந்தச் சூழ்நிலைக்கேற்ப மாறும் உணர்ச்சி வேறுபாடு.) இக்கலையானது, தென் மாவட்டங்களில் அம்மன் கோவில் விழாக்களிலும், கொடை விழாக்களிலும் இப்போதும் நடத்தப் பெற்று வருகின்றது. தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் இடம் பெறுகின்றது. இதன் தோற்றம் குறித்துப் பலவாறு செய்திகள் உள்ளன. இக்கலை பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றியி்ருக்கலாம் என்பர். (தி.சி. கோமதி நாயகம், தமி்ழில் வி்ல்லுப்பாட்டுக்கள். ப. 78) ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டு முதற்கொண்டே இது தமிழகத்தில் செல்வாக்குடன் விளங்கி வருகிறது.
வில்லுப்பாட்டுக்கெனத் தனிப்பட்ட மேடை வடிவம்
ஏதுமில்லை. திருவிழாக்களின் போது கோயில்களுக்கு முன்னால்
அமைக்கப்படும் மேடையில் இது நடத்தப் பெறுகிறது. பொது
நிகழ்ச்சிகளின்
போதும் வில்லுப்பாட்டு நடத்திக் காட்டப்படுகிறது.
எனினும் வில்லுப்பாட்டுக் குழுவினர் அனைவரும் உரிய
வகையில் அமர்ந்து கொள்ளத்தக்க மேடை
அமைக்கப்பட்டிருக்கும். வில்லுப்பாட்டு மேடைக்கெனப் பொதுவான ஒளியமைப்பே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒளியமைப்பில் பயன்பாடு அல்லது தரவேறுபாடு நிகழ்ச்சியில் எந்த மாறுபாட்டையும் ஏற்படுத்துவதில்லையாதலால் ஒளியமைப்பில் தனிக் கவனம் ஏதும் இல்லை. இக்காலத்தில் மின்சார ஒளி விளக்குகள் பெருமளவில் பயன்படுத்தப் பெறுகின்றன. வில்லுப்பாட்டு நிகழ்வு வில்லை அடிக்கும் கோலின் சத்தத்தையும், பாடல் வரிகளையும் உரைநடையையும், பின்பாட்டுக்காரன் சொற் குறிப்புக்களையுமே முதன்மையாகக் கொண்டதாகும். மேடையில் அமர்ந்திருக்கும் கலைஞர்கள் உரத்த குரலில் பாடும் திறன் மிக்கவர்கள். என்றாலும் இக்காலத்தில் ஒலியமைப்புக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
வில்லுப்பாட்டுக் கலையில் ‘வில்’ என்னும் இசைக்கருவி
முதன்மை பெறுவதிலிருந்தே
இசையின் பங்களிப்பின்
முக்கியத்துவம் நமக்குப் புரியும். இதனாலேயே ‘வில்லிசை’
என்றும்
பெயர் பெற்றமைகிறது.
வில்லுப்பாட்டின் முதன்மைக் கருவியாகிய வில்லினைத் தயாரிக்க வில்கதிர், முனைக்குப்பிகள், வடம், மணிகள், மணிகளைக் கோத்திடத் தேவையான வளையங்கள், கம்பிகள், கயிறுகள் முதலியனவாகும்.
பனையின் வைரம் பாய்ந்த அடிமரப் பகுதியினின்றும்
செதுக்கி உருவாக்கப்படும் வில்பகுதியின் உடற்பகுதி கயிற்றால்
வரிந்து சுற்றப்பெறும். மணிகளைக் கோக்கத் தேவைப்படும்
வளையங்கள் உரிய இடைவெளி விட்டு, கதிரில் பொருத்தப்
பட்டிருக்கும். ‘புலவர்’ என்றழைக்கப்படும் வில்லினை இயக்குபவர் கைகளில் வைத்திருக்கும் கோல் வீசுகோல் எனப்படுகிறது. இவ்வீசுகோல்களைக் கொண்டு புலவர் நாண் மீது தாளத்திற்கேற்பத் தட்டி இசை எழுப்புவர். வில்லுப்பாட்டில் ‘உடுக்கு’ என்னும் இசைக் கருவியும் சிறப்பிடம் பெறுகிறது. தெய்வம் சார்ந்த கதைகளுக்கும், வீர அவலக் கதைகளுக்குமான உணர்ச்சிக் கூறுகளை வெளிப்படுத்த
இது தனிக்கவனத்துடன் மண்ணால் உருவாக்கப் பெறும்.
மண்குடமானது மேடையில் ‘புரியணை’ என்னும்
வைக்கோல்
வளையத்தின் மேல் வைக்கப் பெற்றிருக்கும். புரியணையின் மேல்
குடம் வைக்கப்பட்டுள்ள
நிலையில் தான் குடத்தின் கழுத்துடன்
வில் கதிரின் நடுப்பகுதி சேர்த்து கட்டப்பெறும். குடத்தினை
இயக்க, ‘பத்தி’ மற்றும் ‘சொட்டிக்கட்டை’ ஆகியனவற்றைப்
பயன்படுத்துவர். ‘பத்தி’ கொண்டு
குடத்தின் வாய்ப்பகுதியிலும்,
‘சொட்டிக்கட்டை’ கொண்டு குடத்தின் மீதும் தட்டி ஓசை
எழுப்பப்படும். இரண்டு வட்ட வடிவ இணைப்பகுதிகளால் ஆன இசைக்கருவி இது. இரும்பினாலோ பித்தளையினாலோ இது ஆக்கப் பெற்றிருக்கும். இணையான இரு மரக்கட்டைத் துண்டுகளால் ஆன கருவி இது. கருங்காலி மரத்துண்டுகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட சதுர வடிவில் கைக்கி அடக்கமாக இஃது அமைந்திருக்கும். இதனைக் ‘கட்டைத் தாளம்’ என்று பெயரிட்டு வழங்குவர்.
வில்லுப்பாட்டுக்கான கதைகள் பல்வேறு வகையில்
அமைகின்றன. மரபு வழிக்கதைகள் முதல் தற்கால நிகழ்வுகள்
வரை எதையும் வில்லுப்பாட்டுக்கான கதையாகக்
கொள்ளலாம்.
ஆனால் கட்டமைப்பு நிலையில் அவை பொதுவான வடிவத்தைக்
கொண்டு விளங்குவதைக்
காணலாம்.
போன்றனவாகும்.
வில்லுப்பாட்டானது தனித்துவம் மிக்க பாடல் மற்றும் உரை
கலந்த
அமைப்பைக் கொண்டு விளங்குகிறது.
எனத் தொடங்கி அமையும்.
‘புலவர்’ எனப்படுகிற தலைமைக் கலைஞர் பாட்டின் இடையிடையே உரைநடையால் விளக்கம் அளிப்பார். புலவர் பாடியும் உரை சொல்லியும் முடிக்கும் போது இடைமறிக்கும் பின்பாட்டுக்காரர் ‘ஆமா’, ‘ஆகா’, ‘ஓகோ’, ‘அப்படியா’, ‘எப்படி’, ‘சரி’ எனப் பல சொற்களை சூழ்நிலைக்குத்தக்கவாறு பேசுவார். கதைக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அமைப்பு முறையாக இது விளங்குகிறது. ஒரே போக்கில் செல்லும் கதையின் வேகத்தை மாற்றி, அலுப்பின்றிப் புத்துயிர் ஊட்ட இது போன்ற சொற்கள் உதவுகின்றன எனலாம். இது வில்லுப்பாட்டின் தனித்தன்மை வாய்ந்த அமைப்புக் கூறாகும்.
வில்லுப்பாட்டு மேடையில் முக்கியமான கூறாக விளங்குவது
‘வில்’ எனப்படும் இசைக்கருவியே எனலாம். வில்லுப்பாட்டுப்
புலவரும் அவருக்குப் பக்கத்துணையாக உள்ள மற்ற
பாட்டுக்காரர்களும் அவர்களுக்கென அமைக்கப்பட்டிருக்கும்
மேடையில் இருக்கவேண்டிய முறைப்படி அமர்ந்து கொள்வர்.
பொதுவாக ஐந்து கலைஞர்கள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் பங்கு
பெறுவர்.
வில்லுப்பாட்டானது நாடகக் கூறுகள் மிகுந்து விளங்கும் கலை வடிவமாகும். இதில் பாடுகின்ற கலைஞர் வாய்மொழியாகக் கதை நிகழ்வினை நடத்திக் காட்டும் பொழுது நாடகத் தன்மையுடன் நிகழ்த்திக் காட்டப்படும். வில்லுப்பாட்டின் நிகழ்ச்சிக்கான கால அளவு பல இரவுகள் கூடத் தொடர்ந்து வருவதுண்டு. கோயில் விழாக்களில் பாடப்பெறுவதால் இது முக்கியமான சடங்குத் தொடர்பான கலை நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. இதனால் கதை நிகழ்ச்சிகளை வெவ்வேறு சொற்களில் மீண்டும் மீண்டும் பாடி நிகழ்த்துவதுண்டு. தற்பொழுது கால மாற்றத்திற்கேற்ப ஒரே இரவில் பாடி முடிக்கும் வழக்கமும் உள்ளது. மேலும் பொது நிகழ்ச்சிகளில் பதினைந்து நிமிடத்திற்குள்ளாகவே வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினை நடத்திக் காட்டும் வண்ணம் இடம் பெறச் செய்துள்ளனர். இக்காலத்தில் வில்லுப்பாட்டானது கால மாற்றத்திற்கேற்ப புதுமையாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இப்புதுமைக்கு வித்திட்டவர் பிச்சைக்குட்டிப் புலவர் ஆவார். பல சமுதாய நிகழ்வுகளை வில்லுப்பாட்டாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டவர் இவர். கால அளவில் சுருக்கம், கதையமைப்பில் மாற்றம், கதைப் பொருளில் புதுமை போன்றவற்றைக் கொண்டு வந்தார். கட்டப்பொம்மன், பாரதி, காந்தியடிகள் கதை போன்றனவும், கண்ணகி கதை, சீதா கல்யாணம் போன்றனவும் இவரால் உருவாக்கப் பெற்ற குறிப்பிடத்தக்க வில்லுப்பாட்டுக்களாகும். இவர் ‘வில்லிசை வேந்தர்’ எனப் போற்றப்பட்டார். திரைப்படத்தில் வில்லுப்பாட்டினை அறிமுகம் செய்த
அறிவியல், கருத்துப்பிரச்சாரம், விழிப்புணர்வுப் பிரச்சாரம் போன்ற பலவற்றிற்கு வில்லுப்பாட்டு மிகச் சிறந்த ஊடக வடிவமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.
வில்லுப்பாட்டானது மக்களது உள்ள உணர்ச்சியோடு ஒன்றி
வளரும் கலையாக உள்ளது. நாடகத்தன்மை மிகுந்த நிலையில்
கதை கூறலில் இது உருவாக்கித் தரும் பயன்பாடுகள் பலவாகும். |