தமிழ் நாடகம் சமூக வாழ்வில் இயைந்து மக்களுக்கு ஏற்ற நற்கலையாகப் பங்களிப்பு செய்து வருகிறது. காலத்தோடு மாறி வருவதோடு மக்களின் தேவைக்கேற்ற வடிவ மாற்றம் பெற்று வாழும் கலையாகவும் இக்கலை விளங்குகிறது. நாட்டுப்புற வாழ்வும், விழாக்களும், நாடக வடிவமான கூத்துகளும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதபடி ஒருங்கிணைப்புப் பெற்றுள்ள நிலையை, தமிழ்நாடக வரலாற்றின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகவே கருதலாம். |
|