இப்பாடப் பகுதி, ‘சிறுகதை மன்னன்’
என்று போற்றப்படும் ஜெயகாந்தனை அறிமுகம் செய்து, அவர்
எழுதிய சிறுகதைகளின் வழி வெளிப்படும் பாத்திரப் படைப்பு,
சமுதாயப் பார்வை, நடைத்திறன் ஆகியவற்றை விளக்குகிறது.
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில்
ஒருவரான ஜெயகாந்தனைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம்.
ஜெயகாந்தனின்
சிறுகதைகளின் கதைப்போக்குகளைப்
பெரிதும் அறிந்து கொள்ள இயலும்.
ஜெயகாந்தனின்
சமுதாயப் பார்வை, ஏழை எளிய
மக்களிடம் அவர் காட்டும் அக்கறை, அவருடைய பெண் விடுதலைச்
சிந்தனைகள் இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
ஜெயகாந்தனின்
நடைச்சிறப்பு, படைப்பாளுமைத்
திறன் இவற்றையும் அறியலாம்.