சமுதாய அவலங்களைத்
தமக்கே உரிய எழுத்து வன்மையால் அழுத்தமாகப் புதினங்களில் புலப்படுத்தினார்.
ஆங்கிலத்தில் படித்த புதினங்களைத் தமிழில் சுருக்கித் தந்தார்.
என் வாழ்வு (1940), பார்வதி பி.ஏ. (1945), ரங்கோன்
ராதா (1948), கலிங்கராணி (1954), தசாவதாரம்,
இன்ப ஒளி (1968) முதலிய ஆறு புதினங்களைப் படைத்துள்ளார்.
9 குறும்புதினங்களும் இவர் படைத்துள்ளார்.
1930 முதல் 1969 முடிய, தம் எழுத்தால், பேச்சால், அரசியல் மாற்றங்களுக்குப் பெரும்
பங்களிப்பைச் செய்தவர் அண்ணா. சிறுகதை, புதினம், நாடகம் என்ற இலக்கிய வகைகளில்
சோதனை செய்து அவற்றைச் சமுதாயச் சீர்திருத்தத்துக்குப் பயன்படச் செய்தவர்.
தமிழ் உரைநடையை வளர்த்தவர். மேடைத் தமிழ் என்ற ஒன்றினைப் பொலிவுறச் செய்தவர்.
இயல், இசை, நாடகங்களில் ஆழ்ந்த கருத்தைச் செலுத்தியவர். பல்துறை அறிவு, பல்துறை
ஆற்றல், எழுத்தாற்றல், பேச்சாற்றல், சிந்தனை ஆற்றல், அறிவுக் கூர்மை, கருத்துருவாக்கத்திறம்,
கருத்துப் பிரச்சார உத்திகள் இவற்றைக் கொண்ட அண்ணாவைப் பேரறிஞர் என்று அறிஞர்
உலகம் பாராட்டுவது பொருத்தமல்லவா !
|