| 1.0 பாட முன்னுரை 
மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இலக்கிய
வகைகளில் புதினமும் ஒன்று. தமிழ்ப்புதின எழுத்தாளர்களுள்
குறிப்பிடத்தக்க  எழுத்தாளர் கி. ராஜ நாராயணன்.
இவருடைய ‘கோபல்லபுரத்து மக்கள்’ எந்த வகையைச்
சார்ந்தது என்பது பற்றியும் அந்த நாவலில் கையாளும்
உத்திகள்  ஆகியவை  பற்றியும்  இப்பாடத்தில்
விளக்கப்படுகிறது. |