பாடம் - 1
P10141 கி.ராஜநாராயணனின் புதினங்கள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
தமிழ் நாவல் ஆசிரியர்களுள்
குறிப்பிடத்தக்கவர் கி.ராஜநாராயணன். இந்தப் பாடம்
கி. ராஜநாராயணனை அறிமுகம் செய்கிறது. அவர் எழுதிய கோபல்ல
கிராமத்து மக்கள் எனும் புதினத்தின் வழி வெளியிடப்படும்
அவருடைய சமுதாயப் பார்வை, பாத்திரப் படைப்பு, நடைத்திறன்
ஆகியவற்றையும் விளக்குகிறது.
|
|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களைப் பெறலாம்.
• |
கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமத்து மக்கள்
எனும் புதினத்தின் மூலம், சமூகத்தில் நிலவிய பல்வேறு
பிரச்சனைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
|
• |
குடும்பம், வாழ்க்கை, சமுதாயம் பற்றிய மதிப்பீட்டை அறியலாம்.
|
• |
கி.ரா. வின் நடையில் காணப்படும் எளிமை, உவமை,
பழமொழி, வர்ணனை, வட்டார வழக்கு ஆகியவற்றை
அறிந்து கொள்ளலாம்.
|
|
|
|