3.0 பாட முன்னுரை
மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இலக்கிய
வகைகளில் புதினமும் ஒன்று. தமிழ்ப் புதின எழுத்தாளர்களுள்
வளர்ந்து வரும் பெண் எழுத்தாளர் சிவகாமி. இவருடைய
ஆனந்தாயி என்ற நாவல் எந்த வகையைச் சார்ந்தது என்பது
பற்றியும் அந்த நாவலில் கையாளும் உத்திகள் ஆகியவை
பற்றியும் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது.
|