பாடம் - 3

P10143 சிவகாமியின் புதினங்கள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழ் நாவல் ஆசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர் சிவகாமி. இந்தப் பாடம் சிவகாமியை அறிமுகம் செய்து அவர் எழுதிய புதினங்கள் வழி வெளிப்படும் அவருடைய சமுதாயப் பார்வை, பாத்திரப்படைப்பு ஆகியவற்றை விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களைப் பெறலாம்.

சிவகாமியின் புதினங்கள் மூலம் சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
குடும்பம், வாழ்க்கை, சமுதாயம் பற்றிய மதிப்பீட்டை அறியலாம்.
சிவகாமியின் நடையில் காணப்படும் எளிமை, வர்ணனை, வட்டார வழக்கு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.