படிப்பதற்கும், நடிப்பதற்கும் என்று படைக்கப்பட்ட
நாடகங்களுள் மனோன்மணீயம் தலைசிறந்தது. ஆங்கில
நாடகங்களின் - குறிப்பாகச் சேக்ஸ்பியர் நாடகங்களின்
தாக்கத்தால், மனோன்மணீயம் என்ற மிகச் சிறந்த நாடகம்
ஒன்றைப் பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை இயற்றினார். இது,
தமிழ் நாடக வளர்ச்சியில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
மனோன்மணீயம் பற்றிய செய்திகள் இதில் தொகுத்துக்
கூறப்பட்டுள்ளன. |