இந்த நாடகம் தமிழரின் வீரப் பண்புகளைப் பேசுகிறது.
தமிழரின் இயற்கை ஈடுபாட்டை எடுத்துரைக்கிறது. நிலையாமைத்
தத்துவத்தைப் பேசுகிறது. தமிழர்கள் பொதுவாகத் துன்பியலை
விடவும் இன்பியலையே போற்றுவார்கள் என்னும் உண்மையை
இந்நாடகம் வெளிப்படுத்துகிறது.
தூயவனுக்குத் தீயவனால் வரும் சோதனையும், அதில்
தூயவன் வெற்றி பெறுவதும் கூறப்படுகிறது. தீயவனாகிய
குடிலனின் சூழ்ச்சியும், தூயவனாகிய சீவக மன்னனின் பண்பு
இயல்புகளும் இப்பாடத்தில் சுட்டப் படுகின்றன.
|