புராணம், வரலாறு சமூகம் என எந்தப் பின்னணியில்
இருந்து நாடகக் கதையைத் தேர்வு செய்தாலும் அதில்
தம்காலச் சிந்தனையைச் சம்பந்த முதலியார் புகுத்தினார்;
தமிழ் நாகரிகம், பண்பாட்டுக்கு ஏற்ப கதைப்போக்கு
அமையவேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார்;
கண்களையோ, மனத்தையோ துன்புறுத்தாத அளவில்
குடும்பத்தவர் அனைவரும் அமர்ந்து நாடகத்தைப்
பார்த்து மகிழ வேண்டும்; அதற்கேற்பவே கதைக்
கோப்பும் அமைய வேண்டும் என்று எண்ணினார்.
நாடகத்துக்கென்று ஓர் இயல்புத் தன்மை (Naturality)
உண்டு. அவ்வியல்புத் தன்மை கெட்டுவிடக்
கூடாது என்பதில்
மிகுந்த கவனம் செலுத்தினார்.
நாடகத்துக்கு எனத் தேர்வு
செய்யப்பட்ட இயல்புக் கதைக்கும்,
பாத்திரப் படைப்புக்கும்
உண்மையாக இருக்க வேண்டும்; தம் கருத்துகளை வலியப்
புகுத்துதல் கூடாது என்பதில்
கவனம் செலுத்தினார்.
பிரச்சாரம் என்பது சம்பந்த முதலியாரைப் பொறுத்த
வரையில் அவரது நாடக இலக்கல்ல; குறிக்கோளும் அல்ல.
எனவே அவர் பிரச்சார நாடகத்தை அதிகமாக
எழுதவில்லை.
உண்மையான சகோதரன் என்ற ஒரு
நாடகத்தை மட்டும்
பிரச்சார நாடகமாக எழுதினார். இந்த நாடகம் 1930 ஆம்
ஆண்டு சம்பந்த முதலியாரால்
எழுதப்பட்டது.
மதுவிலக்குப் பிரச்சார சபையின் தலைவராகச்
சம்பந்த
முதலியார் இருந்ததால் இந்த நாடகத்தை
எழுதினார்.
தமிழகத்தின்
பல மாவட்டங்களில் இந்த
நாடகம் அரசின்
ஆதரவுடன்
நடித்துக் காட்டப்பட்டது.
|