பத்தொன்பதாம்
நூற்றாண்டில் வாழ்ந்த நாடகக்
கலைஞர்களுள் ஒருவரான பம்மல் சம்பந்த முதலியாரின்
வரலாற்றையும் நாடகக் கலைப் பணியையும் இந்தப் பாடம்
சொல்கிறது.
ஆங்கில நாடகங்களை மட்டுமே விரும்பிப் பார்த்துக்
கொண்டிருந்த சம்பந்த முதலியாருக்குத் தமிழ் நாடகங்களை உருவாக்குவதில்
எவ்வாறு ஈடுபாடு ஏற்பட்டது என்பதை
இந்தப்
பாடம் விளக்குகிறது.
தமிழில் எத்தனை நாடகங்களை அவர் எழுதினார், அவற்றில்
மொழிமாற்றம் செய்த நாடகங்கள் எத்தனை என்ற விவரத்தைச்
சொல்கிறது.
நல்ல கல்வியும் அரசாங்கப் பதவியும் இருந்தும்கூட நாடகக்
கலை வளர்ச்சிக்காக அவர் எவ்வாறு தம்மை ஆட்படுத்திக்
கொண்டார் என்பதைச் சொல்கிறது.
நாடகக் கதைகளில் அவர் செய்த புதுமைகளைச் சொல்கிறது. |