கவிதை,
கல்வெட்டு, இசை, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு
துறைகளிலும் தம் முத்திரையைப்
பதித்தவர் கவிமணி
தேசிகவிநாயகம் அவர்கள். அவர் கவிதையை
உயிராக
நேசித்தவர்.
கவிமணியின் கவிதைகள்
உணர்ச்சி நிறைந்தவை. ‘என் எழுத்தும்
தெய்வம்; என் எழுதுகோலும்
தெய்வம்’ என்று கூறிய பாரதியின் கவிதைகளில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்தவர் கவிமணி.“பாட்டுக்கொரு
புலவன் பாரதியடா - அவன்
பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா ! - அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா.” என்ற பாடலைக் கவிமணி பாடியதன் மூலம் அவருக்குப் பாரதி
மீதிருந்த மதிப்பை உணர்ந்து கொள்ளலாம்.
எளிமையாகப் பாடுபவர்; இனிமையாகப் பாடுபவர். குழந்தைகளுடன்
குழந்தையாக வாழ்ந்தவர். பழமையின் பாதுகாப்பில்
புதுமைக்குப் பாலம் அமைத்தவர். இத்தகைய சிறப்புடைய கவிமணியின்
உள்ளத்தை இனிக் காணலாமா? |