2.1 முடியரசன் | ||
|
தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தின்
பகுதியாக இருந்த
பெரியகுளம் இவர் பிறந்த ஊர். சுப்பராயலு
- சீதாலட்சுமி
இவருடைய பெற்றோர். 7-10-1920-இல் பிறந்தார். |
|
|
||
|
துரைராசு என்ற தம் பெயரைத் தமிழில்
அழகாய் மொழி பெயர்த்து முடியரசன் என்று மாற்றிக்கொண்டார். |
|
|
||
தமிழைத் தெளிவுடன் கற்றுப் புலவர் பட்டம் பெற்றார்.
காரைக்குடியில் தமிழ் ஆசிரியராகப் பணி ஆற்றினார். சிறந்த கவிதைகளை இயற்றினார்.
பல கவி அரங்கங்களில் பங்கு பெற்றுத் தமிழ்நாடு முழுதும் புகழ் பரவப் பெற்றார்.
3-12-1998-இல் மறைந்தார். ‘சொல்லிய வண்ணம் செயல் அரியது’ என்றார் வள்ளுவர்.
தம் கவிதைகளில் சொல்லிய கொள்கை வழியில் இருந்து சிறிதும் தவறாமல் வாழ்ந்து
காட்டிய மிகச்சில தமிழ்க் கவிஞர்களுள் ஒருவர் முடியரசன். |
||
|
||
இவர் எழுதிய கவிதைகளைத் தொகுத்து முடியரசன் கவிதைகள் என்னும் நூலாக, 1954-இல் வெளியிட்டவர் தமிழறிஞர் தமிழண்ணல். இந்நூல் மாநில அரசின் பரிசுபெற்றது. இதில் உள்ள பல கவிதைப் பகுதிகள் சாகித்ய அகாதமியால் மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன. காவியப் பாவை (1960), கவியரங்கில் முடியரசன் (1964) ஆகிய தொகுதிகளும்; பூங்கொடி (1964), வீரகாவியம் (1966) ஆகிய காவியங்களும் இவர் படைத்துள்ளார். மாநில அரசின் ‘கவியரசு’ விருது பெற்றவர். இவரது பல கவிதைகள் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிப் பாட நூல்களில் பாடமாக இடம் பெற்றுள்ளன. |