2.5 பெருவாழ்வு | |
|
“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை, தமிழ்க் கவிஞன் பாரதிதான் செத்ததுண்டா?” என்று பாடினார் பாரதிதாசன். அவரும் இறவாத புகழுடன் இன்றும் வாழ்கிறார். பாரதிதாசனைத் தம் தந்தை, ‘தமிழர் தந்தை’ என்று பாடியவர் முடியரசன். அவரையும், திரு.வி.க.வையும், கா. அப்பாதுரை யாரையும், ‘விதவை மறுமணக் கழகம்’ நிறுவிய தமிழ்த் தொண்டர் முருகப்பாவையும், கலைவாணரையும் தம் கவிதைகளால் இறவாத சொல் ஓவியங்களாகத் தீட்டி வைத்திருக்கிறார் முடியரசன்.
பழங்காலத்தில் கவிஞர்கள்,
‘வள்ளல்கள்’ என்று அரசரைப் புகழ்ந்துள்ளனர். ஆனால்
இங்கு, ஓர் அரசன் - முடியரசன் ஒரு
கவிஞரை ‘வள்ளல்’ என்று புகழ்ந்திருக்கிறார்.
கவிமணி தேசிக விநாயகரைக்
காரணத்துடன், வள்ளல் என்று பாடுகிறார்
முடியரசன், கவிமணி என்னும் கவிதையில் -
செந்தமிழ்க்கு
வாழ்வுஅளித்தோன்; சேர்ந்தோர்க்கு
இறவாத பெருவாழ்வு பெற்ற தம்
முன்னோர்போல்
தாமும் சாவதை வரவேற்கிறார் முடியரசன். இறப்பே
வா என்ற கவிதையில் சாவை அழைக்கிறார். ஒரு
காதலியாய்த் தம்மை வந்து தழுவச் சொல்கிறார் :
உன்னைக்கண்டு அஞ்சுகிறார் கோழை மாந்தர்
முடியரசன் சமஉரிமைக்கான புரட்சியின் விளைவில் தமக்குச் சாவு வர வேண்டும் என்று விரும்புகிறார் |