காலத்தின் வேகத்தில் தமிழ்க் கவிதை இயல்பான
ஒரு
புது வளர்ச்சியைப் பெற்றது. புதுக்கவிதை தோன்றியது.
ஆங்கிலத்தில் ‘New Poetry’, ‘Modern Poetry’ எனத்
தோன்றிய சொல்லாக்கங்களுக்கு இணையாகத் தமிழில்
அமைந்த சொல்லாக்கமே புதுக்கவிதை என்பது. 1960-ஆம்
ஆண்டில்தான் இந்தக் கவிதை வகை இப்பெயரைப் பெற்றது.
என்றாலும், 1934-ஆம் ஆண்டிலேயே ஒரு கவிஞர்
இவ்வகைக் கவிதைப் படைப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.
அவர்தாம் ந.பிச்சமூர்த்தி. அவரையும் அவரது கவிதைகள்
பற்றியும் அறிந்துகொள்ளும் வகையில் இப்பாடப் பகுதி
அமைந்துள்ளது.
|