இதுவரை ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் பற்றிய சில
செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை
அறிந்து கொண்டீர்கள் என்று நினைவுபடுத்திப் பாருங்கள் :
- ந. பிச்சமூர்த்தி என்னும் கவிஞரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.
- அவரது கவிதைகள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.
- மரபில் இருந்து விலகித் தமிழில் புதுக்கவிதை தோன்றுவதற்குப் பிச்சமூர்த்தி
ஆற்றிய பங்கு பற்றிப் புரிந்துகொள்ள முடிந்தது.
- அவரது கவிதைகளில் பாடப்பெறும் பொருள்கள் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.
- பிச்சமூர்த்தியின் படைப்புக் கலைத்திறன்கள் பற்றிப் புரிந்துகொள்ள முடிந்தது.
- பிச்சமூர்த்தியின் வாழ்வியல் பற்றிய பார்வையை உணர்ந்துகொள்ள முடிந்தது.
|