5.5 தொகுப்புரை

நண்பர்களே ! இதுவரை அப்துல் ரகுமானின் கவிதைகள் பற்றிய சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திப் பாருங்கள் :

  • அப்துல் ரகுமான் பற்றியும் அவரது கவிதைப் படைப்புகள் எவை என்பது பற்றியும் சுருக்கமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
  • அப்துல் ரகுமானின் கவிதைப் படைப்புக்குப் பொருளாய் அமைந்த உள்ளடக்கங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.
  • அவரது கவிதைகளில் அடங்கியுள்ள கற்பனை வளம், சொல்லாட்சி, உவமை, உருவகம், படிமம் போன்ற கலைத் திறன்களைச் சான்றுகள் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது.
  • அவர் தமிழ்க் கவிதையில் அறிமுகப்படுத்திய புதுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.
  • சுவைத்துத் திளைப்பதற்காகவும் நுகர்தல் பயிற்சிக்காகவும் ஒரு கவிதையைப் படித்துக் கொள்ள முடிந்தது.

 

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1)

தமது சொல்லாட்சித் திறன் விளங்க அப்துல் ரகுமான் இட்டுள்ள நூல் தலைப்பு ஒன்றைக் குறிப்பிடுக.

(விடை)
2)
விதைபோல் விழுந்தவன் - என்ற உவமைத் தொடர் யாரைக் குறிக்கிறது?
(விடை)
3)
ஐந்தாண்டுக்கு ஒரு முறை என்னும் கவிதையில் இடம்பெறும் தொன்மம் யாது?
(விடை)
4)
அப்துல் ரகுமான் கஸல், ஹைக்கூ கவிதை வடிவங்களை எந்தெந்த மொழிகளிலிருந்து அறிமுகப்படுத்தினார்?
(விடை)

நூல்களின் பட்டியல்


  1. பால்வீதி - 1974 அகரம், சிவகங்கை
  2. நேயர்விருப்பம் - 1978 அன்னம், சிவகங்கை
  3. ஆலாபனை - 1995 கவிக்கோ பதிப்பகம், சென்னை - 5
  4. சுட்டுவிரல் - 1986 செல்மா, சிவகங்கை
  5. விதைபோல் விழுந்தவன் - 1998 தாரகை, சென்னை - 41
  6. முத்தமிழின் முகவரி - 1998 தாரகை, சென்னை - 41
  7. பித்தன் - 1998 தாரகை, சென்னை - 41
  8. மின்மினிகளால் ஒரு கடிதம் - 2002 கவிக்கோ பதிப்பகம் சென்னை - 41