அரசியல், கல்வி, அறம், அறிவியல் ஆகிய துறைகளிலும்
இலக்கியம், இசை போன்ற நுண்கலைகளிலும் அன்றைய
தமிழரின் நிலை பற்றி அறியப் புறநானூறு உதவுவதை
விளக்குகிறது. அன்பு அருள், நட்பு, வீரம், மானம், ஈகம்
(தியாகம்), ஈகை போன்ற பண்புகளில் அக்காலத் தமிழர்
சிறந்து விளங்கியதைப் புறநானூறு மூலம் எடுத்துக் காட்டுகிறது.