பாடம் - 4

P10344 அறப்பளீசுர சதகம்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

சிற்றிலக்கியங்களில் ஒன்றான சதகம் பற்றிச் சொல்கிறது. அறப்பளீசுர சதகம் பற்றிப் பேசுகிறது.

அந்நூலின் ஆசிரியரைப் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கிறது. நிலையாமை, வறுமையின் கொடுமை, கோபத்தின் விளைவு முதலியவற்றை விளக்குகிறது.

நல்ல நெறிகளைச் சுட்டிக்காட்டி, மனிதர்கள் மனிதர்களாக, உயர்ந்தவர்களாக வாழ்வதற்குரிய வழிகளை எடுத்துக் கூறுகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
  •  
சதக இலக்கியம் பற்றியும் அதன் அமைப்புப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
  •  
அறப்பளீசுர சதகத்தின் ஆசிரியர் பற்றியும், அந்நூலின் பாடுபொருள் பற்றியும் அறியலாம்.
  •  
நல்ல வாழ்க்கைக்குத் தேவையான பல செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
  •  
வாழ்க்கையில் விலக்க வேண்டியவை, செய்ய வேண்டியவை ஆகியவற்றில் தெளிவு ஏற்படுத்திக் கொள்ளலாம்.