உலகுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாய் உள்ளவன் சிவன்.
இயற்கையை உடலாகக் கொண்டவன். இறைவனுடைய சிறப்புகளை இவ்வந்தாதி எடுத்துரைக்கிறது.
இறை இயல்பும், இறைமைக் குணங்களும் ஆங்காங்கே எடுத்துரைக்கப்படுகின்றன. ஈகைக்
குணம் உடையவன் சிவன். பல நாள் பணிந்து இரந்தால்
|
 |
|
|
சிவபெருமான் |
|
எவ்வுலகும் அளிக்கும் இயல்புடையன் - (78)
என்று காரைக்கால் அம்மையார் பாடுகிறார்.
சிவபெருமான் வேண்டியார்க்கு
வேண்டிய வடிவில் வருபவன் என்பதை,
எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே யாம் - (33)
என்ற பாடலிலும், அட்ட மூர்த்தியானவன் என்பதை,
அவனே இருசுடர் தீ ஆகாசமாவான்
அவனே புவிபுனல் காற்றாவான் - அவனே
இயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து - (21)
என்ற பாடலிலும் விளக்குகிறார் அம்மையார். (ஞாயிறு, திங்கள், ஐம்பூதங்கள், உயிர்
ஆகிய எட்டும் அவனே, இதனை அட்டமூர்த்தி என்ற சொல்லால் குறிப்பிடுவார்கள். இயமானன்=
உயிர்)
சிவபெருமான் எவ்வுருவில் இருக்கிறான் என்று சொல்ல
இயலாது. எல்லா உருவிலும் இருக்கிறான். அவன் ஒருவராலும் அறியப்படாதவன் என்பதே அவன்
இலக்கணமாம். அவ்விலக்கணம் அம்மையாரால் பின்வரும் பாடலில்
பேசப்படுகிறது.
அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது - (61)
எளிமையானவன். ஆனாலும் எங்கும் வியாபித்திருப்பவன். எல்லாமே அவன்தான் என்பதை,
அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர் பார் ஆகாயம்
அப்பொருளும் தானே அவன் - (20)
என்ற பாடல் உணர்த்தும்.
|