பாடம் - 5

P10345 அற்புதத் திருவந்தாதி

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

பதினொன்றாம் திருமுறைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள அற்புதத் திருவந்தாதி பற்றிச் சொல்கிறது. அந்நூலின் ஆசிரியராகிய காரைக்காலம்மையார் பற்றிய செய்திகளைத் தருகிறது.

அந்நூலின் சிறப்புகளை, இலக்கிய நயத்தை விளக்குகிறது, அந்நூல் தெரிவிக்கும் செய்திகளை விளக்கிச் சொல்கிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
  •  
சைவத் திருமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
  •  
சிற்றிலக்கிய வகைகளை அறியலாம்.
  •  
அற்புதத் திருவந்தாதியின் அமைப்பையும் இலக்கியச் சிறப்பையும் அறிந்து மகிழலாம்.
  •  
அந்நூல் விளக்கும் சைவ நெறியை - அன்பு நெறியைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
  •  
சிவபெருமான் திருவருளைப் பற்றியும், அடியார்களின் அன்புப் போக்கையும் அறிந்து கொள்ளலாம்.