தன் மதிப்பீடு : விடைகள் - II
|
|
1) | சூளாமணியின் சமயக் கொள்கை யாது? |
சூளாமணி சமண சமயக் கொள்கையை உடையது. காப்பிய மாந்தர்கள் அருகதேவனை வணங்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டுள்ளன. அருகனை வணங்கினால் பிணி நீங்கும், பிறவி நீங்கும், விசும்பொடு வரம் கிட்டும், ஒளிவிரிந்து மகிழ்வர், மெய்ம்மறந்து உள்மகிழ்வர் எனும் பயன்களை உரைக்கிறது. |