தன் மதிப்பீடு : விடைகள் - II

2) பாரதிதாசனின் மொழிப் பற்றுக்குச் சான்று தருக?

தமிழ், தமிழன், தமிழ்நாடு எனும் முப்பரிமாணங்களில் பாரதிதாசன் கவிதைகள் ஒளிர்கின்றன.

‘தமிழ்நாடு தமிழருக்கே’ எனும் கொள்கையில் தீவிரமாக இருந்தவர்.

என் நாட்டை நான் ஆள ஏற்ற கலையுதவும்
தென்னாட்டுத் தீரர்; செழுந்தமிழர் ஆசிரியர்

என்று வீரத்தாயில், தமிழ்ப் பெண்ணின் வீரத்தையும் தமிழின் ஆக்கத்திற்கும், தமிழ்நாட்டின் ஆட்சிக்கும் விழிப்புடன் இருத்தல் அவசியம் என்பதையும் பாவேந்தர் பாரதிதாசன் சுட்டிக் காட்டுகிறார்.



முன்