தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
3) |
வீரத்தாயில் காணலாகும் பொதுவுடைமைக் கருத்துகளை எழுதுக. |
மக்கள் அனைவரும் சமமானவர்கள். எல்லோருக்கும் எல்லாமே பொதுச் சொத்துக்கள் எனும் பொருளியல் கொள்கையில் தீவிர நம்பிக்கை கொண்டவர் பாரதிதாசன். இதனை வீரத்தாயில் வீரமகனான சுதர்மன் மூலம் வெளிப்படுத்திக் காட்டுகிறார். ‘எல்லார்க்கும்
தேசம்; எல்லார்க்கும் உடைமை எலாம் என்று மணிபுரியை ஆளும் உரிமை இனி மன்னனுக்கில்லை, அனைத்து மக்களுக்கும் தான் என்று குடியரசுக்குட்படுத்தும் அரசியல் பிரகடனத்தைக் காண முடிகிறது. |