தமிழச்சி,
கொடிமுல்லை என்னும்
இரண்டு
காவியங்களிலும் பெண்கள் முதலிடம் பெறும்
பாங்கினைத்
தெளிவாக எடுத்துச் சொல்கிறது. தமிழச்சி
என்னும் நூல்
இனவுணர்வையும், கொடிமுல்லை என்னும்
பெயர் கவிஞரின்
இயற்கை ஈடுபாட்டையும் வெளிப்படுத்துவதை இந்தப்
பாடம்
குறிக்கின்றது.
ஆங்கிலேயரின்
அடக்குமுறைச் சட்டத்திற்குக் கடுமையாக
உட்பட்டிருந்த காலத்தில் இனஉணர்வு, மொழியுணர்வு பற்றிப்
பாடியிருப்பதை எடுத்துச் சொல்கிறது.
வடவர்
ஆதிக்கத்திலிருந்து திராவிடத்தை
மீட்பது,
இந்தியின் ஆதிக்கத்திலிருந்து தமிழைக்காப்பது
போன்ற
அரசியல், பொருளியல், சமூகவியல் சிந்தனைகளைப்
பற்றிக்
கவிஞர் குறிப்பிட்டிருப்பதை எடுத்துச் சொல்கிறது.
கற்பு
என்பது வாழ்வில் ஆணுக்கும் பெண்ணுக்கும்
சமமானது என்பதை எடுத்துரைக்கிறது.
கடவுள் மறுப்பு,
புராணஇதிகாச எதிர்ப்பு, மூடநம்பிக்கை,
சாதிக் கொடுமை, கலப்பு
மணத்தை ஆதரித்தல்,
கைம்பெண்மணம், காதல் மணம், முதியோர் கல்வி, சேரிகளைச்
சீர்திருத்துதல் போன்ற பகுத்தறிவுக் கருத்துகளைப்
பற்றியும்
எடுத்துரைக்கிறது.
|